தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென் தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை பற்றிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் குமரி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன
மேலும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் குமரி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் 4 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தங்கச்சிமடத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், முத்து பேட், பாம்பன், கடலாடி ஆகிய இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, அதிராம்பட்டினம், சீர்காழி, பாபநாசம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.